×

மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து

டெல்லி: மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும்போதே மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என்பது தெரிகிறது. அரசின் கொள்கை சார்ந்த முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றாலும் மாணவர்கள் கோரிக்கை ஏற்று மாற்றம் செய்ய வேண்டியது அரசின் கடமை என நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.


Tags : Supreme Court ,Chief Justice ,DY Chandrachud , Medical Education System, Change, Chief Justice Chandrachud, Supreme Court
× RELATED கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான...