×

பாக். அணிக்கு ஆதரவு இளைஞரை மன்னிப்பு கேட்க வைத்த கும்பல்: கோவாவில் அதிர்ச்சி சம்பவம்

பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த இளைஞரை கும்பல் ஒன்று பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த அதிர்ச்சிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ பதிவில், கோவாவின் கலாங்குட் பகுதியில், ஒரு ஓட்டலில் நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம், ‘நீங்கள் எந்த அணிக்கு ஆதரவு?’ என கேட்கிறார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் ‘பாகிஸ்தான்’ என பதிலளிக்கிறார்.

‘பாகிஸ்தான் அணிக்கு ஏன் ஆதரவு?’ என யூடியூபர் கேட்க, அதற்கு ஓட்டல் உரிமையாளர் `இது இஸ்லாமியர் வசிக்கும் பகுதி’ என்று கூறுகிறார். ‘இந்தியாவின் கோவா மார்க்கெட் பகுதியில் இருந்துகொண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிப்பதை பார்க்கும்போது வியப்பாக உள்ளது’ என்று கூறுவதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், கலாங்குட் பகுதியை சேர்ந்த கும்பல் நேற்று முன்தினம் இரவு அந்த ஓட்டல் உரிமையாளரை மிரட்டி, இஸ்லாமியருக்கு என்று மட்டும் இங்கு தனிவழி கிடையாது. மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரிக்க வேண்டாம்’ என்று கூறி அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தனர். அவர் முழங்காலிட்டு மன்னிப்புகேட்ட போது அவரை சுற்றியிருந்தவர்கள் வற்புறுத்தியதால் ‘பாரத் மாதாகி ஜெய்’ என்று கோஷமிட்டார். ஆனால் இந்த வீடியோ குறித்து தற்போது வரை எந்த புகாரும் வரவில்லை என்று போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.

Tags : Bach ,Goa , Pak. Team support, gangs made to apologize, Goa,
× RELATED தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7...