பெரியகுளம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95)
உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “
உங்களைப் போலவே
நானும் கலங்குகிறேன்
மூத்து முதிர்ந்து
உதிர்ந்தாலும்
தாய் தாய்தானே
ஒரு முதலமைச்சரைப்
பெற்றுக்கொடுத்தோம் என்ற
பெருமாட்டியின் பெருமை
மறைவதில்லை
என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே
எல்லாத்
துன்பங்களிலிருந்தும்
காலம் உங்களை
மீட்டெடுப்பதாகுக” என்று பதிவிட்டுள்ளார்.