×

சீர்காழி அருகே எடமணலில் அழிவிலிருந்து நாட்டு இன மாடுகளை காப்பாற்றி வளர்க்கும் விவசாயி-கிராம மக்கள் பாராட்டு

சீர்காழி : சீர்காழி அருகே எடமணைலில் அழிவிலிருந்து நாட்டு இன மாடுகளை காப்பாற்றி வளர்க்கும் விவசாயிகளுக்கு கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணலில் வசிப்பவர் அப்பாசாமி (55). இவரது முன்னோர்கள் பாரம்பரியமாக நாட்டு மாடுகளை வளர்த்து வந்தனர். இந்நிலையில் அப்பாசாமியும் நாட்டு மாடு வளர்ப்பை கையில் எடுத்துக்கொண்டு, அழிவிலிருந்து காப்பாற்றும் வகையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றார்.

தற்போது வளர்த்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட நாட்டு இன மாடுகளை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மாடுகளை மேய விட்டு வளர்த்து வருகிறார். சில இயற்கை விவசாயிகள் இவரது மாடுகளை தனது வயல்களில் கிடை அமைக்க சொல்லும் போது அந்த வயலில் கிடை அமைத்து கொடுத்து வருகிறார். இதனால் கிடைக்கும் சிறிய வருமானத்தை பெற்று மாடுகளை பராமரித்து வருகிறார். கிடைகள் அமைக்கும்போது மாடுகள் போடும் சாணத்தை வைத்து விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் ரசாயனம் கலக்காத சாணம் உரத்தை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நாட்டு இன மாடுகள் பெரும்பாலும் அழிந்து வரும் நிலையில் அப்பாசாமி நாட்டு இன மாடுகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையே வளர்த்து வருகிறார். அவர், வளர்க்கும் நாட்டு மாடுகள் வீரியமிக்கதாக இருப்பதால் நாட்டு மாடு இன காளைகளை பல்வேறு பகுதியிலிருந்து காளைகள் வளர்ப்போர் வந்து வாங்கிச் சென்று ஜல்லிக்கட்டு காலையாக வளர்த்து வருகின்றனர்.

அவர், வளர்க்கும் நாட்டு இன மாடுகள் கன்றுகள் போடும்போது அந்த மாடுகளின் பால்களை விற்பனை செய்வதில்லை. பால் முழுவதையும், கன்றுகள் குடிக்க விட்டு விடுகிறார். இதனால் கன்றுகள் வீரியமிக்கதாக வளர்ந்து துள்ளி குதித்து தாய்களுடன் விளையாடி வருகின்றன. நாட்டு இன மாடுகளை காப்பாற்றி வரும் அப்பாசாமிக்கு தமிழக அரசு ஊக்குவிக்கும் வகையில் உதவிகளை வழங்கினால் மேலும் அவரது நாட்டு இன மாடு வளர்ப்பிற்கு பெரும் உதவியாக இருக்கும்.

தற்போது ஓரிரு மாடுகள் வளர்க்கவே பலர் பல்வேறு சிரமங்கள் அடையும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை இரவு பகல் என மாடுகளுடன் மழை வெயில் காலங்களில் சாலைகளில் ஓரங்களிலும் வயல்களிலும் மேய விட்டு பராமரித்து வருவதை அனைவருமே பாராட்டி வருகின்றனர்.

Tags : Edamanal ,Sirkazhi , Sirkazhi: The villagers have praised the farmers who have saved the native breed cows from extinction near Sirkazhi.
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்