×

தமிழக மீனவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் வேல்முருகன் (42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (39), அருண்குமார் (27), மாதவன் (36), கார்த்தி (32), முருகன் (55) ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், பைபர் படகில் மோதி நிறுத்தினர். பின்னர் மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கி, படகில் இருந்த வலைகளை சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்து சென்றனர். இலங்கை கடற்படையினர் தாக்கியதில் படுகாயம் அடைந்த 5 மீனவர்கள், அங்கிருந்து உயிர் தப்பி நேற்று பகல் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்தனர்.


Tags : Tamilnadu , Attack on Tamilnadu fishermen with iron rod
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...