கோவை: பேரூரில் தஞ்சமடைந்துள்ள மக்னா காட்டு யானைக்கு ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன், சதாசிவம், சுகுமார், பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழு யானைக்கு மயக்க மருந்து செலுத்தினர். டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கிராமங்கள் வழியாக நுழைந்த யானை ,தற்போது பேரூரில் தஞ்சமடைந்துள்ளது.