×

ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் தினமும் 150 விஐபி டிக்கெட்டுகள்

திருமலை: ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் தினமும் 150 விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக, இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தருக்கு விஐபி டிக்கெட் ரூ.500 கட்டணத்தில் அனுமதிக்கப்படும். திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கும் விஐபி டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, திருமலையில் கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் நாளை (இன்று) இதற்கான கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு நாளைக்கு 150 விஐபி தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 750 டிக்கெட் ஆன்லைனிலும், 100 டிக்கெட்டுகள் ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்திலும் தொடர்ந்து 6 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.  இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tirumalai ,Ethumalaian , Etummalayanai, Tirumala, 150 VIP, tickets
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...