சென்னை: பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசுவதாக எழுந்த புகாரில் தமிழக அரசுக்கு பட்டியலின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டியலினத்தோர் மீது அவதூறு பேச்சுகள் என பட்டியலின நல ஆணையத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.