×

தமிழக மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல்: மமக தலைவர் கண்டனம்

சென்னை: மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து ஆறு மீனவர்கள்,  நாட்டுப்படகில்  தோப்புத்துறைக்குக் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 10 பேர், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும், இச்சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழர்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

Tags : Tamil Nadu ,Mamaka , Attack on 6 fishermen in Tamil Nadu: Mamaka leader condemns
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...