×

முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சை பேச்சு: கர்ணல் பாண்டியனை கைது செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை..!

சென்னை: எங்களுக்கு குண்டு வைக்க தெரியும், பாம் போட தெரியும், எல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள் நாடு தாங்காது என பா.ஜ.க நிர்வாகி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிம்சனில் கண்டன உண்ணாவிரத போராட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், பா.ஜ.க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ராணுவ வீரர்கள் குண்டுவைப்பதில், சுடுவதில், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள்; ஆனால் இதையெல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை, எங்களை செய்ய வைத்துவிடாதீர்கள் என தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன் என சர்ச்சையை தூண்டும் வகையில் பேசினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பத்திரிக்கையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது முறையானதா என செய்தியாளர்கள் கேட்டதால் பத்திரிகையாளர்களுக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கர்ணல் பாண்டியனை கைது செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Colonel Pandian , Ex-soldier Controversy Talk: Various parties demand to arrest Colonel Pandian..!
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...