சென்னை: நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்துகளை தடுக்க அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூச உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகள் தெளிவாக தெரியாததால் அதிக விபத்துகள் நடக்கிறது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.