×

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை:  மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையத்தை நிறுவியது. இங்குள்ள 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Vallur , 500 MW power generation affected at Vallur power plant
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்