புதுடெல்லி: ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தனது டிவிட்டர் பதிவில்,” டெல்லியில் உள்ள எனது வீட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது கடந்த 2014ம் ஆண்டு முதல் நடந்த நான்காவது சம்பவமாகும். நான் ஜெய்ப்பூரில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது எனது ஊழியர் போன் செய்து மர்மகும்பல் வீட்டின் மீது கல் எறிந்ததாக தெரிவித்தார். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இதுபோன்று நடந்துள்ளது கவலை அளிக்கின்றது” என்று பதிவிட்டுள்ளார்.