டெல்லி: டெல்லி மேயர் தேர்தலை பிப்ரவரி 22ல் நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். பிப்ரவரி 22ம் தேதி மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற முதலமைச்சர் கெஜ்ரிவாலின் பரிந்துரையை துணைநிலை ஆளுநர் ஏற்றார். 24 மணி நேரத்துக்குள் மேயர் தேர்தல் அறிக்கையை வெளியிட நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.