சேலம்: கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும், வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.