மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் காரில் இருந்து இறங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மக்களை சந்தித்தார். தரிசனத்தை முடித்துவிட்டு புறப்படும்போது வெயிலில் காத்திருந்த மக்களை சந்தித்து வணக்கம் தெரிவித்தார். தரிசனத்துக்கு பின் தெற்கு ஆவணி மூல வீதியில் காத்திருந்த மக்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்தார். காரில் இருந்து இறங்கி வந்து குடியரசுத் தலைவர் பேசியதால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.