×

கஞ்சா கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு சிறை: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆவடி: கடந்த 2022ம் ஆண்டு, அக்டோபர் 18ம் தேதி ஆந்திராவின் நர்சிப்பட்டினம் பகுதியில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த மதுரை, மேலமாசி வீதியை சேர்ந்த அருண்பாண்டி (31), விக்னேஷ் (28) ஆகிய 2 பேரையும் எம்.ஏ.நகர் சோதனைச்சாவடியில் நடைபெற்ற வாகன சோதனையில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 451 கிலோ கஞ்சா, லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்திய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து பூந்தமல்லியில் உள்ள சென்னை போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், வழக்கு முடிந்து நேற்றுமுன்தினம் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கும் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.4.60 லட்சம் அபராதம் விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் அரசு தரப்பு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார்.

Tags : Poontamalli , 12 years in jail for 2 ganja smugglers: Poontamalli special court verdict
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ