டெல்லி: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் டிஜிட்டல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் பெங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிக அளவிலான டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.