நெல்லை: நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி கட்டாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் வரி பாக்கி செலுத்திய ரசீதை அதிகாரிகள் காண்பித்ததால் சில கடைகளில் சீல் அகற்றப்பட்டது.