கோவை: கோவை நீதிமன்றம் அருகே கொலை நடந்த வழக்கில் தேடப்படும் நபர்களை பிடிக்க நீலகிரியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட எஸ்.பி.பிரபாகரன் உத்தரவில் குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் போலீஸ் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஓட ஓட விரட்டி கோகுலை வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க வாகன தணிக்கை நடந்து வருகிறது.