சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம், பிரியாணி, மது விநியோகம் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கள நிலவரம் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கள ஆய்வு செய்தனர். ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் 45 சதவீதம், அதிமுக 39.52 சதவீதம் வாக்குகளை பெறும் என கள ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.