×

இளங்கோவனை ஆதரித்து பிரசாரம்: ஐஎன்டியுசி அறிவிப்பு

சென்னை: இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்(ஐஎன்பி) சென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் கே.நாகராஜ்  தலைமை தாங்கினார். செகரட்டரி ஜெனரல் எம்.பன்னீர்செல்வம், ராயபுரம் பி.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத், ஐ.என்.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம கர்ணன், கைத்தறி நெசவாளர்பிரிவு பொதுச்செயலாளர் ஆர்.தாமோதரன், ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் இளவரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வருகிற 22, 23ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் ஐ.என்.டி.யு.சி தேசிய தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை மாவட்டத்தின் சார்பில் அனைத்து பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்பது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அமோகமாக வெற்றி பெற ஐ.என்.டி.யு.சி சார்பில் தேர்தல் பிரசாரதில் ஈடுபடுவது. போக்குவரத்து துறையில் ஓட்டுனர், நடத்துநர் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனே தமிழக அரசு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து விஷ்ணுபிரசாத் எம்.பி. அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி எழுதப்பட்டு விட்டது. வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பது தான், வரலாற்று வெற்றியாக அமையும். அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட் பறிபோகும் என்றார்.


Tags : Alangoven ,INTUC , Campaign in support of Elangovan: INDUC announcement
× RELATED திமுக கூட்டணிக்கு ஐஎன்டியூசி ஆதரவு