சென்னை: மெரினா கடற்கரையில் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிகளின் படி கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை இல்லை என தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. அண்ணா நினைவிடத்திற்குள்தான் கலைஞரின் நினைவிடம் அமைந்துள்ளது என்று அரசு பதில் தெரிவித்துள்ளது.