கோவை: கோவை அருகே அருணாச்சல கவுண்டர் வீதியில் உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகேஷ் கண்ணா, ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. கைதான இருவர் அளித்த தகவலின் பேரில் மனோஜ் குமார் வயது 22 விமல்குமார் வயது 24, மற்றும் முரளி வயது 30 ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.