காஷ்மீர்: ராகுல் நடைப்பயணத்தில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என ஜம்மு காஷ்மீர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். காஷ்மீரில் நடக்கும் பாரத் ஜோடா யாத்திரையில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். நடைப்பயணத்தின் போது பங்கிஹாலில் பெரும்கூட்டம் இணைவது பற்றி அமைப்பாளர்கள் தகவல் தரவில்லை என்றும் போலீசார் கூறினர்.