×

வட்டம்பாக்கத்தில் மனு நீதி நாள் முகாம்: ரூ 4.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஸ்ரீபெரும்புதூர்: வட்டம்பாக்கத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில், 305 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். குன்றத்தூர் ஒன்றியம் வட்டம்பாக்கம் ஊராட்சியில், மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார்.

குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி  வரவேற்றார். எம்எல்ஏக்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்டக் குழு தலைவர் படப்பை மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

முகாமில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர், பொதுமக் களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதையடுத்து ஏற்கனவே கோரிக்கை மனு கொடுத்த 305 பயனாளிகளுக்கு ரூ.4.39 கோடி மதிப்பில்  இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முகாமில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

Tags : Manu Justice ,Day ,Camp ,Vattambakkam ,Minister ,T. Moe Andarasan , Manu Neeti Day Camp in Vatambakkam: Provided welfare assistance worth Rs 4.39 crore: Minister Thamo Anparasan
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...