×

குடியரசு தினவிழாவில் தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு அரசு

சென்னை: குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25.01.2023 முதல் 26.01.2023  முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 


Tags : Republic Day ,Government ,Nadu , Public not allowed to visit memorials of leaders on Republic Day: Tamil Nadu Govt
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...