×

காவல்துறை அதிகாரிகள் மீது ஆணையத்தில் புகார் அளிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு உள்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறை புகார் ஆணையம் சார்பில் நேற்று உள்துறை செயலாளரை சந்தித்து பேசினர். இதையடுத்து முதல்நிலை காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை புகார்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் தங்களுடைய புகார் மனுக்களை அளிக்கலாம். அதைப்போன்று மாவட்ட துணை கணிப்பாளர் மற்றும் அதற்கு மேற்ப்பட்ட உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் மீது ஏதேனும் புகார்கள் இருப்பின் நேரடியாக உள்துறை செயலாளர் தலைமையில் இயங்கும் புகார் ஆணையத்தில் நேரடியாக புகார் அளிக்கலாம். மேலும் காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

Tags : Commission , Complaints can be made to the Commission against police officers
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...