×

அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கமா?: அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயார்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ஏராளமான தனியார் விடுதிகள் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த முறை  நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம். குற்றால அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டது. செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை மூட நீதிபதிகள் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வணிக நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அந்த குற்ற நடவடிக்கைக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


Tags : ICourt , waterfall, natural, stream, artificial, report, icourt branch
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு