சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனிடமும் ஆதரவு கேட்கவுள்ளோம் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டோம். முதலமைச்சர் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அது எங்களுக்கு வெற்றியை தேடித் தரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.