சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தலைவர் சரத்குமார் நாளை ஆலோசனை நடத்துகிறார். சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து காணொலி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.