×

ஜம்முவில் பனிச்சரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பலியாகவில்லை. பந்திபோரா மாவட்டத்தின் துலைல் என்ற பகுதியில் உள்ள ஹுசங்கம் கிராமத்தில் நேற்று மாலை திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பலியாகவில்லை. பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும், இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும், பனிச்சரிவு அபாயம் உள்ள இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Avalanche ,Jammu , Avalanche in Jammu
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...