×

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 108 ரன்களில் சுருண்டது..!!

ராய்ப்பூர்: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 108 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நியூசிலாந்து வீரர்கள் வெளியேறினர். ராய்ப்பூரில் நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்களை நியூசிலாந்து வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சால் நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 36, பிரேஸ்வெல் 22, சான்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி வெற்றிக்கு 109 ரன் இலக்கு

ராய்பூரில் நடக்கும் 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.இந்திய அணியின் பந்துவீச்சால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 36, பிரேஸ்வெல் 22, சான்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர். முதலாவது ஒரு நாள் போட்டியில் 140 ரன்கள் எடுத்த பிரேஸ்வெல் தற்போது 22 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.


Tags : New Zealand , Raipur, 2nd ODI, New Zealand bowled out for 108 runs
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.