×

அடுத்தடுத்து 2 குழந்தைகள் இறந்ததால் தாய் தூக்கிட்டு தற்கொலை

பல்லாவரம்: பழைய பல்லாவரம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் மனிஷா (20). இவரது கணவர் தீனு (27). இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தீனு, வேலூர் மாவட்டத்தில் தங்கி, வேலை பார்த்து வருகிறார். மனிஷா பழைய பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான முதல் ஆண்டு மனிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஒன்றரை வயதில் உடல் நலக்குறைவு காரணமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன், மனிஷாவுக்கு 2வது குழந்தை பிறந்தது. சில நாட்களில் அந்த குழந்தையும் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மனிஷா, தினமும் குழந்தைகளை நினைத்து வீட்டில் அழுது கொண்டிருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், மனிஷா உடலை மீட்டு, பிரேத  பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 குழந்தைகள் இறந்ததால் மனவேதனையில் தாய், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 5வது பிளாக் முதல் தெருவை சேர்ந்தவர் செல்வி. இவரது, கணவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் பிரவீன் (27), தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரவீன் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், பிரவீன் வேலை செய்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், காதலில் ஏற்பட்ட பிரச்னையில் மன உளைச்சலில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, தாயும் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Mother hanged herself after 2 children died in succession
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...