×

தலைமறைவு குற்றவாளி கைது

அண்ணாநகர்: தஞ்சாவூரை சேர்ந்தவர் விவேகானந்தன் (30). பிரபல கஞ்சா வியாபாரியான இவர், கடந்த 2019ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பஸ் மூலம் சென்னைக்கு 19 கிலோ கஞ்சா கடத்தி வந்தபோது, கோயம்பேடு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த விவேகானந்தன், அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்யும்படி கோயம்பேடு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், விவேகானந்தன் கோயம்பேடு பேருந்து நிலையம் வருவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், அங்கு வந்த விவேகானந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Absconder , Absconder arrested
× RELATED கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது