சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து வரும் 27ம் தேதி முடிவு செய்வதாக அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அமமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பழனிசாமி, பன்னீர்செல்வம் இருதரப்பினரும் இடைதேர்தலில் போட்டியிட்டால் இரட்டை இலை முடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.