சென்னை: புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி கட்டடங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.202.7 கோடி மதிப்புள்ள வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். வகுப்பறை, ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், விடுதிகள், மின்னணு நூலகங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 5 சித்தா உதவி மருத்துவர்கள், 5 ஆயுர்வேத உதவி மருத்துவ உள்ளிட்ட 15 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.