சென்னை: குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தக் கோரி தலைமைச் செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.