சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் ரயில்வே உடல் தகுதி தேர்வுக்கு வந்தவர்கள் 2கி.மீ. தூரம் காத்திருக்கின்றனர். ரயில்வே தேர்வு நாடு முழுவதும் நடைபெறும் நிலையில் ஆவடியில் காவல் படை வளாகத்தில் தேர்வு மையம் அமைத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 5,000 பேர் வீதம் 5 நாட்கள் தேர்வுக்கு 25,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.