சென்னை: அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை தடய அறிவியல் கூடத்தில் தொடங்கியது. மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றுவருகிறது.