கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திராவில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. பண்டிகை நாட்களை முன்னிட்டு ஆடுகள் ரூ.7000 முதல் ரூ.12,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.