சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்கள் வழியாக 4 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக மேலும் சிறப்பு ரயில் வேண்டும் என பயணிகள் ேகாரிக்கை விடுத்தனர். இதையடுத்து தாம்பரம் - நெல்லை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் - நெல்லை (எண்.06049) அதிவேக சிறப்பு ரயில் நாளை (14ம் தேதியன்று) சனிக்கிழமை இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு, மறுதினம் ஞாயிற்று கிழமை அதிகாலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் (எண்.06050) மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து வரும் 18ம் தேதி புதன்கிழமை மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் வியாழன் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயிலில் 3 அடுக்கு ஏசி பெட்டிகள் இரண்டும், 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகளும், 6 பொதுப்பெட்டிகளும் இடம் பெற்றிருக்கும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயில்களுக்கான முன்பதிவுகள் இன்று(13ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.