×

மதுரை, அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு அனுமதி

மதுரை: மதுரை, அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு அனுமதி வழங்கி மத்திய விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், 24 மணி நேர சேவையை தொடங்க, பணியாளர்களை நியமிக்க விமான போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது. பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இரவிலும் விமானங்கள் இயக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Tags : Madurai ,Akarthala ,Imphal ,Bopal ,Surat , 24 hours service allowed at 5 airports namely Madurai, Agartala, Imphal, Bhopal and Surat
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...