×

நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய 8 பேர் கொண்ட கும்பல்: வியாசர்பாடியில் பரபரப்பு

சென்னை: வியாசர்பாடி பி.பீ காலனியில் தலைக்கவசம் மற்றும் முகம்மூடி அனித்துவந்த 8 பேர் கொண்ட கும்பல் கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு ஓடிவரும் காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. வியசார்படி பி.பீ காலனி முதல் தெரு எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை மூலக்கடை வரை 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் கண்ணில் தென்படும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களை அடித்து சேதப்படுத்திவிட்டு ஓடும் காட்சிகள் சி.சி.டி.வி.யில் வெளியானது.

குறிப்பாக வியாசர்பாடியில் மாமூல் தரமறுத்ததாக திரும்ப வந்துட்டோம் என்றும் கெத்து காட்டுவதற்கு, சாலையில் நிறுத்தி வைத்திருந்த 10க்கும்  மேற்பட்ட வாகனங்களை அடித்தும், கண்ணில் சிக்கும் பொதுமக்கள் அனைவரையும் இந்த ரவுடி கும்பல் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1வது தெருவில் பொதுமக்கள் 4 மற்றும் 2 சக்கர வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்திவைத்து இருந்திருகிறார்கள் இந்த நிலையில் நேற்று நாளிரவு அவ்வழியாக முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் பட்டா கத்திகளுடன் சாலையில் நிறுத்தி வைத்திருந்த 4 மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார்கள். அதுமட்டுமல்லாமல் மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கிருக்கிறார்கள் பொதுமக்களை பட்டா கத்தியால் வெட்டி மாமூல் தரவேண்டும் என்று கூறி அராஜகத்தில் ஈடுபட்டுருக்கிறார்கள்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களை அந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தியை  காட்டி மிரட்டியுள்ளார்கள். அதனால் அவர்கள் அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள், இந்த கும்பல் டி.வி. காலனி, எருக்கஞ்சேரி பகுதி பக்தச்செல்லாம் சாலை, மூலக்கடை வரை சென்று 5க்கும் மேற்பட்ட நிறுத்திவைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த எம்.கே.பி நகர் போலீசார் ரகளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க முயன்ற போது அந்த 8 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடினர்.

இந்த ரவுடி கும்பல் தாக்குதல் குறித்து வியாசர்பாடி சேர்ந்த நவீன், லோகநாதன், என்.கே.பி. நகரை சேர்ந்த கோபி, கொடுங்கையூரை சேர்ந்த இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி காயத்ரி  ஆகியோருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி காயத்ரி ஆகியோர் வெட்டும்போது மாமூல் தரமாட்டியா என்று கூறி அவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்திற்கு ஈடுபட வியாசர்பாடி சேர்ந்த கலைச்செல்வன் ஆகியோரின் ரவுடி கும்பல் என்று தெரிய வந்துள்ளது.

Tags : Vyasarpadi , 8-member gang smashes vehicles at midnight: Vyasarpadi riots
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...