மதுரை: மதுரை தோப்பூர் அருகே காசநோய் மருத்துவமனையில் பாடல்களை படி நோயாளிகளின் மனச்சோர்வை நீக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை தோப்பூர் அருகே காசநோய் மருத்துவமனையில் நோயாளிகள் குறைந்த பட்சம் 3 மாதங்கள் வரை தங்கி இருந்து சிகிக்சை பெறுவது வழக்கம். தொற்றுப்பரவல் அச்சம் காரணமாக அவர்களுடன் உறவினர்கள் யாரும் இருப்பதில்லை. இதனால் நோயாளிகளின் மனச்சோர்வை போக்க மருத்துவமனை ஊழியர்கள் புது யுக்தியை கையாண்டுள்ளனர்.
தினமும் மாலை 6 மணிக்கு மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்கள் நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டுக்கே சென்று பாடல் பாடி உற்சாக படுத்துகின்றனர். அவர்களோடு வயது வித்தியாசமின்றி நோயாளிகளும் நடனமாடி கவலைகளை மறந்துவிடுகின்றனர். சிகிச்சை அளிப்பது மட்டும் இன்றி நோயாளிகளின் மனச்சோர்வை போக்க புது முயற்சியை மேற்கொண்டுவரும் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.