×

ஆம்பளைங்க கண்டுக்கிறதே இல்ல…மக்கள் தொகை பற்றிய நிதிஷ் பேச்சால் சர்ச்சை

பாட்னா: பீகாரின் வைசாலியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், ‘‘பெண்கள் படிப்பறிவு பெற்றால்தான் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க முடியும். அதுவரை மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க முடியாது. இந்த விஷயத்தில் ஆண்கள் தங்களின் செயலின் தாக்கத்தை உணரத் தயாராக இல்லை. எனவே பெண்கள் முறையான கல்வி பெற்றால் தவிர மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாது’’ என்றார்.

இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் நிகில் ஆனந்த், ‘‘அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்திய நிதிஷ் குமார் அறிவிழந்து விட்டார். அவர் நாவை கட்டுப்படுத்த வேண்டும். அவர் மாநிலத்தின் கண்ணியத்தை கெடுக்கிறார்’’ என்றார்.


Tags : Ambala ,Nitish , Can't see Ambal...Controversy due to Nitish's speech on population
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து