×

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது

சென்னை: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், மேல்மலை கிராமம் மன்னவனூர் பகுதி விஏஓ சுவாமிநாதன். இவரிடம் கவுஞ்சி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், தாயாரின் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர மனு செய்தார். அதற்கு விஏஓ சுவாமிநாதன், ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி ராஜகோபால், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அறிவுறுத்தல்படி ராஜகோபால், சுவாமிநாதனிடம் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், விஏஓ சுவாமிநாதனை கைது செய்தனர். இதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூரை சேர்ந்தவர் அசோக்குமார்(29). சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். இவரிடம் 7 சென்ட் வீட்டு மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஒலக்கூர் கிராம நிர்வாக அலுவலரான, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்த கருணாகரன் (48) நேற்று கைது செய்யப்பட்டார்.


Tags : VAOs , 2 VAOs arrested for taking bribe for change of belt
× RELATED கீழ்வேளூர் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..!!