×

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி தங்க ரதத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சி: பெண்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பெண்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை 12:30 மணிக்கு கோவிலுக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடந்தன. பூஜை முடிந்ததும் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் காலை 6 மணியளவில் ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்களும், இலவச தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் எழுந்தருளினார். தங்க தேரை பெண்கள் வடம் பிடித்து இழுக்க பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் 4 மாட வீதியில் தேர் வலம் வந்தது. இன்று மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை மற்றும் இரவு அதிநாயன உற்சவம் நடைபெறவுள்ளது. நாளை வைகுண்ட துவாதசியையொட்டி ஏழுமலையான் கோவில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.


Tags : Vaikunda Ekadasi ,Tirupati , Tirupati, Vaikunda Ekadasi, Thanga Ratham, Ejumalayan
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!