×

அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி: சங்க நிர்வாகிகள் அறிக்கை

சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் கே.கணேசன், மாநில தலைவர் எஸ்.மதுரம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், தற்போதுள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, கனிவுடன் பரிசீலனை செய்து அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Union , Thanks to Tamil Nadu Chief Minister for increase in basic price, Association Executives report
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...