×

பாகிஸ்தானுக்காக 2 அணிகளை உருவாக்குவதே இலக்கு: அப்ரிடி

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சொந்த  மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதாவது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப்  (இவர் இங்கிலாந்துக்கு எதிரான 1வது டெஸ்டில் மட்டுமே விளையாடினார்) இல்லாத  நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் தோல்வியுற்றதை அடுத்து, சொந்த  மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.  

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) இடைக்கால தேர்வுக் குழு தலைவர் ஷாஹித் அப்ரிடி, பெஞ்ச் வலிமையை மேம்படுத்த பாகிஸ்தானுக்காக இரண்டு அணிகளை உருவாக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:

பாகிஸ்தான் அணியின் பெஞ்ச் வலிமையை மேம்படுத்துவதற்காக எனது பதவிக்காலம் முடிவதற்குள் இரண்டு அணிகளை உருவாக்க விரும்புகிறேன். கடந்த காலத்தில் தகவல் தொடர்பு இல்லாதது போல் உணர்கிறேன். வீரர்களின் பிரச்னைகளை தனித்தனியாக பேசி தெரிந்து கொண்டேன். 45 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பகார் ஜமான் மற்றும் ஹாரிஸ் சோஹைலின் தேர்வை நியாயப்படுத்தினார். ஆனால் நான்  நேரடியாக ஹரிஸ் மற்றும் பகார்ஜமானிடம் பேசி அவர்களது டெஸ்ட் எடுத்தேன்.  வீரர்களுக்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே நேரடியான தொடர்பு இருக்க  வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு இடைவெளியை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்தியாவில் பலதரப்பட்ட அணிகளை பிசிசிஐ உருவாக்குவதுபோல் பாகிஸ்தானிலும் உருவாக்கவேண்டும் என்பதே ஷாகித்அப்ரிடியின் நோக்கமாக ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் கருதுகின்றனர்.

Tags : Pakistan ,Afridi , Aim to make 2 teams for Pakistan: Afridi
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...